Sunday 1 January 2017

தாயம்

கண்முன்னே விரிந்துகிடக்கும் இந்த பரமபதத்தின்
சுழியத்தில் நிற்கிறேன் ..
என் கணக்கை துவங்க தேவை ஒரு தாயம்...
அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும் ...
என்னை இலக்கிற்கு ஏற்றிவிட
காத்திருக்கும் ஏணிகளை சந்திக்க  ..
வேண்டும் ஒரு தாயம்!!!
தடையென என்னை விழுங்க காத்திருக்கும் பாம்புகளை
ஒரு அலட்சிய புன்னகையோடு கடக்கவேனும்...
வேண்டும் ஒரு தாயம்!!!!
வெறுங்கைகளோடு காத்திருக்கும் நான்
என் சோழிகளை எந்த சமுத்திரத்தில்
தொலைத்தேனோ....
கடல் புகுந்து சோழி சேர்க்க நான் பொன்னியின் செல்வனின்
சமுத்திரகுமாரி அல்லள் ....
ஆழி கொண்ட சோழியை
அலைகக்கும் என காத்திருக்கும்
வானதி ......