வேலாயுதம் இளையதளபதி நடித்து தீபாவளிக்கு வெளியான படம். படம் வெளியாகி ரசிகர்கள் சண்டை போட்டுமுடித்த இந்த நேரத்தில் என்ன விமர்சனம் எழுதவேண்டிகிடக்கு என நீங்கள் யோசிக்கலாம். என்ன செய்ய நான் படம் பார்த்தது நேற்று தானே. படம் பார்த்து முடித்தவுடனேயே முடிவு செய்துவிட்டேன் பதிவு கண்டிப்பாக எழுதியாக வேண்டும் என்று. இந்த பதிவில் நான் எழுதபோவது அனைத்தும் எனது கருத்துக்கலேயன்றி யாரையும் புகழவேண்டும் என்றோ அல்லது இகழ வேண்டும் என்றோ எழுதுவது அல்ல.
விஜய் படம் என தெரிந்ததுமே கதையும் தெரிஞ்சாச்சி.. டிரைலர் பாத்ததும் படம் பார்த்த திருப்தி வந்துவிட்டது. இருந்தாலும் விஜய் படம்னா பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அதனால் படம் பாக்கலாம். சரி இனி வேலாயுததைப்பற்றி பார்ப்போம்.... முதல் காட்சியிலேயே ஏதோ முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழ் நாட்டு அரசியல்வாதியை கடத்தி தமிழ் நாட்டின் அமைதியை குலைக்க ஏற்பாடு செய்கிறர்கள். ஒருவேள தெரியாம விஜயகாந்த் படத்துக்கு வந்துட்டோமானு யோசிச்சிட்டே படத்த பார்க்க துவங்கினேன். அடுத்த காட்சில விஜய் அரிவாள் எடுத்துட்டு ஓடிவரார்... அபாடா விஜய் படம் தான்.... இப்ப ஏதோ சண்டை வரும்னு பாத்தா தங்கச்சிக்கு ட்ரைன்ல இடம் புடிக்கிக்ராறு.. அப்டியே இந்த அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இடையிலான பாசத்த flashbackலையே புரியவைக்கிறாங்க...
விஜய் தற்செயலாக செய்யும் செயல்கள் எல்லாம் ஜெனிலியா உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் செய்வதாக மக்கள் நம்ப விஜய்க்கே தெரியாமல் விஜய் மக்களின் கடவுளாகிறார். விஜய்க்கு உண்மை தெரிய வரும்பொழுது எனக்கு எதற்கு வம்பு என ஒதுங்க அவருக்கே வருகிறது பிரச்சனை... தன்னை ஏமாற்றிய சீட்டு கம்பெனிக்காரனை துவைப்பதில் துவங்குகிறது சூப்பர் ஹீரோ பயணம். அனைத்து கெட்டவர்களையும் துவைத்து, தங்கையை இழந்து, மக்களுக்கு அறிவுரைகூறி இனிதே முடிகிறான் வேலாயுதம். இது கதை சுருக்கம்.
விஜய் படம் அதனால் அவர் மட்டுமே படம் முழுக்க வருகிறார், மற்ற எல்லோரும் வந்து தலைகாட்டிவிட்டு செல்கிறார்கள். முதலில் ஜெனிலியா எல்லா படத்திலும் லூசு பெண்ணாக வருபவர் இதில் கொஞ்சம் நடித்துள்ளார். ஜெனிலியா வழக்கமாக செய்யும் வேலையே இதில் ஹன்சிகா வேலை. விஜயை சுத்தி சுத்தி வருகிறார் அவ்வளவு தான். படத்திற்கு இருக்கும் ஒரே ஒரு பிளஸ் சந்தானம். எல்லா படத்தலையும் வில்லன்கள் பக்கம் பக்கமா வசனம் பேசுவாங்க இதில் அந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ராகவ் கொடுத்த சம்பளத்திற்கு வேலைசெய்திருக்கிறார் பிரச்சனை நடக்கும் இடத்திற்கெல்லாம் வேலாயுதம் வர்றாரோ இல்லையோ இவர் கரெக்டா வந்து வேலாயுதம் புகழ்பாடிட்டு போறாரு.
சரண்யா மோகன் அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி... ஊர் மக்களை காப்பாத்த தன் உயிரை தியாகம் செய்கிறார். இது தவிர ஊர் மக்கள், போலீஸ், சில வில்லன்கள் இப்டி பலர் இருந்தாலும் எல்லாரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவதால் அவர்களை பற்றி பேச எதுவும் இல்லை. பொதுவாக இது போன்ற படங்களில் ஒரே மாதிரியான பிரச்சனைகளை ஹீரோ சமாளிப்பார். இதில் பல பிரச்சனை அதனாலோ எனவோ எந்த மக்கள் பிரச்சனையும் மனதை தொடும் வகையில் படமாக்கப்படவில்லை. இது தவிர படம் முழுக்க அரசியல் பொடி தூவியிருக்கிறார் ராஜா. பாடல்கள் எல்லாம் நன்றாக உள்ளது. விஜயை சூப்பர் ஹீரோவாக காட்டுவதிலேயே முனைப்பாக இருந்ததாலோ எனவோ எந்த உறவும் ஆழமாக பிரதிபலிக்கப்படவில்லை. வழக்கமாக நடனத்தில் தன் தனித்துவத்தை காண்பிக்கும் விஜய் கடந்த சில படங்களாக ஏதோ ஆடிவிட்டு போகிறார். சிம்ரனுக்கு பிறகு நடனம் ஆடத்தெரிந்த ஒரு கதாநாயகி விஜய்க்கு ஜோடியாக்கப்படவில்லை என்பது எனது கருத்து.
இது போன்ற படத்தை எடுக்க பேரரசு போதுமே ராஜா எதற்கு?? அரசியல் நெடி இல்லாமல் சாதாரணமாக எடுத்திருந்தால் திருப்பாச்சி மாதிரி ஒருவேளை பெரிய வெற்றி அடைந்திருக்கலாம். விஜயிடமிருந்து வித்தியாசமான நடிப்பு அல்ல வித்தியாசமான கதைகளம் அமைந்த படங்களையாவது எதிர்பார்க்கிறோம். வில்லு படத்திற்கு பிறகு அவரது ரசிகர்களே ஏமாற்றம் அடைந்திருப்பது உண்மை. இதை உணர்ந்து இனிவரும் படங்களையாவது வித்யாசமாக தேர்ந்தெடுப்பர் என நம்புவோம்.
"இது போன்ற படத்தை எடுக்க பேரரசு போதுமே ராஜா எதற்கு??"-- உண்மையான கருத்து...
ReplyDeleteவிஜயிடம் இருந்து வித்தியாசமான கதைகளத்தை எதிர்பார்க்கும் உங்கள் நம்பிக்கையை பாராட்டுகிறேன் !!
ReplyDeleteமிகவும் உண்மையான பதிவு அபி...வாழ்த்துக்கள்... அடுத்த வலைப்பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்...
ReplyDeleteNandri anivarukkum....
ReplyDelete