இருள்படர்ந்த ஓர் வனத்தினூடே
நகர்ந்து கொண்டிருந்தேன்....
எங்கு நோக்கினும் இருள்....
பாதையில் எதுவும் தடுத்ததாக உணர்வில்லை...
சுற்றும் வெறுமை...
சுவாசிப்பதாக தோன்றவில்லை...
உயிரோடிருக்கிறேன்....
ஒருவேளை காற்றும் இருக்கலாம் ....
துணைக்கு ஒரு தீபம் எடுத்து வந்ததாக நினைவு .....
எதுவும் புலப்படவில்லை....
அதோ அங்கு சற்று அருகில்
யாரோ சென்று கொண்டிருக்கிறார்கள்!!!
யாரது???!!!
ஆணா? பெண்ணா ?
தெரியவில்லை ....
ஒருகணம் ஆந்தையாக
இருந்திருக்கலாம் என தோன்றிற்று....
பெண் தான் என்பதை
அழகாக முடிந்த கூந்தலை சரி செய்யும்
அவள் கரம் கொண்ட வளையல் கூறிற்று ....
யார் இவள்?? என அறிய துடித்தேன்
பெண்களுக்கே உரிய ஆர்வத்தோடு !!
ம்ம்ம்ம்....
பேசா மடந்தை போல் எதையோ
யோசித்துக்கொண்டிருக்கிறாள்....
சரி அவளிடமே கேட்டுவிடலாம்....
அழைக்க கை நீட்டினேன்
அட!!! அவளும் யாரையோ அழைக்கிறாளே.....
சரி... விரைந்து செல்வோம்....
அட!!! அவளும் விரைகிறாள் ...
எவ்வளவு விரைந்தும்
அவளுக்கும் எனக்குமான இடைவெளியை
குறைக்கவே முடியவில்லை...
ஆ... அட .... அய்யோ... விழுந்துவிட்டேனே...
இவளை துரத்தபோய்
கீழே கிடந்த கல்லை
கவனிக்க தவறினேனே.....
தீபமும் விழுந்துவிட்டது ....
என்னை தூக்கிவிட வருகிறாளா???.
மெல்ல நோக்கினேன்....
என்ன இது.... !!!
அவளை காணவில்லை ...!!!
சண்டாளி .... உதவிகூட செய்யாமல் போய்விட்டாளே....
ம்ம்ம்ம்.....
தீபத்தை எடுத்துவிட்டு நிமிர்ந்தேன்
அட!!!... அதோ அவள் ....
தீபத்தை சரிசெய்ய மறைத்தேன்....
மீண்டும் அவளை காணவில்லை..
ஒளியை விடுவித்தேன் ....
மீண்டும் அவள் வந்தாள்....
என்னடா இது என நான் விழிக்க.....
.
.
.
.
.
.
.
அட... முண்டமே....
நீ துரத்தி வந்தது உன் நிழலைத்தான்
என் ஆறாம் அறிவு காறித்துப்பியது...
ஙே......
#நீங்களும் துப்பிட்டு போங்க .....
நகர்ந்து கொண்டிருந்தேன்....
எங்கு நோக்கினும் இருள்....
பாதையில் எதுவும் தடுத்ததாக உணர்வில்லை...
சுற்றும் வெறுமை...
சுவாசிப்பதாக தோன்றவில்லை...
உயிரோடிருக்கிறேன்....
ஒருவேளை காற்றும் இருக்கலாம் ....
துணைக்கு ஒரு தீபம் எடுத்து வந்ததாக நினைவு .....
எதுவும் புலப்படவில்லை....
அதோ அங்கு சற்று அருகில்
யாரோ சென்று கொண்டிருக்கிறார்கள்!!!
யாரது???!!!
ஆணா? பெண்ணா ?
தெரியவில்லை ....
ஒருகணம் ஆந்தையாக
இருந்திருக்கலாம் என தோன்றிற்று....
பெண் தான் என்பதை
அழகாக முடிந்த கூந்தலை சரி செய்யும்
அவள் கரம் கொண்ட வளையல் கூறிற்று ....
யார் இவள்?? என அறிய துடித்தேன்
பெண்களுக்கே உரிய ஆர்வத்தோடு !!
ம்ம்ம்ம்....
பேசா மடந்தை போல் எதையோ
யோசித்துக்கொண்டிருக்கிறாள்....
சரி அவளிடமே கேட்டுவிடலாம்....
அழைக்க கை நீட்டினேன்
அட!!! அவளும் யாரையோ அழைக்கிறாளே.....
சரி... விரைந்து செல்வோம்....
அட!!! அவளும் விரைகிறாள் ...
எவ்வளவு விரைந்தும்
அவளுக்கும் எனக்குமான இடைவெளியை
குறைக்கவே முடியவில்லை...
ஆ... அட .... அய்யோ... விழுந்துவிட்டேனே...
இவளை துரத்தபோய்
கீழே கிடந்த கல்லை
கவனிக்க தவறினேனே.....
தீபமும் விழுந்துவிட்டது ....
என்னை தூக்கிவிட வருகிறாளா???.
மெல்ல நோக்கினேன்....
என்ன இது.... !!!
அவளை காணவில்லை ...!!!
சண்டாளி .... உதவிகூட செய்யாமல் போய்விட்டாளே....
ம்ம்ம்ம்.....
தீபத்தை எடுத்துவிட்டு நிமிர்ந்தேன்
அட!!!... அதோ அவள் ....
தீபத்தை சரிசெய்ய மறைத்தேன்....
மீண்டும் அவளை காணவில்லை..
ஒளியை விடுவித்தேன் ....
மீண்டும் அவள் வந்தாள்....
என்னடா இது என நான் விழிக்க.....
.
.
.
.
.
.
.
அட... முண்டமே....
நீ துரத்தி வந்தது உன் நிழலைத்தான்
என் ஆறாம் அறிவு காறித்துப்பியது...
ஙே......
#நீங்களும் துப்பிட்டு போங்க .....
No comments:
Post a Comment