எல்லாருடைய வாழ்க்கைலயும் மறக்கமுடியாத நாட்கள் இருக்கும் அதில் சில மகிழ்ச்சியானதாகவும், சில சோகமானதாகவும் இருக்கும். ஆனால் ஒருசில நாட்கள் சிரிப்பானதாக இருக்கும், அப்படிப்பட்ட ஒரு நாளைப்பற்றி உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்.
இது நிகழ்ந்தது 2006இல் , அப்பொழுது நான் ஹிந்தி பிரவின் பரிட்சை எழுத முடிவுசெய்தேன் ( எனது அம்மா "உன்னவிட சின்ன பிள்ளைங்க எல்லாம் ஹிந்தி பரிட்சை முடிச்சிட்டாங்க நீ மட்டும் எதையும் ஒழுங்கா செய்யாத" என திட்டியதன் விளைவு இந்த அவசர முடிவு). அதனால் புத்தகத்தை தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்கி படிக்க ஆரம்பித்தேன் ( அம்மா நம்பனும்ல). படிப்பது எப்படி? நல்ல பிள்ளையா தினமும் அத்தை வீட்டிற்கு சென்று படிப்பது என முடிவானது. அதன்படி தினமும் அத்தை வீட்டிற்கு சென்றேன் (போற வழில தான் என் நண்பர் வீடு உள்ளது இப்ப புரிஞ்சிருக்குமே நான் ஏன் அத்தை வீட்டுக்கு போக முடிவெடுதேனு).
இப்படியே இரண்டு மாதங்கள் சென்றதில் பரிட்சை தேதி வந்தது. இது போன்ற அரசாங்க தேர்வுகள் எல்லாம் எஸ்.எல்.பி பள்ளியில் நடைபெறுவது வழக்கம். பிரவீன் தேர்வில் மொத்தமாக 3 எழுத்து தேர்வு மற்றும் 1 நேர்முக தேர்வு 2 நாட்களாக நடைபெறும். முதல்நாள் 2 தேர்வும் எப்படியோ எழுதி முடித்துவிட்டேன். 3 வது தேர்வு இலக்கணம் (தமிழ் இலக்கணமே நமக்கு அரகொற இதுல ஹிந்தி இலக்கணமா? )
தேர்வு அறைக்குள் சரியான நேரத்தில் சென்றுவிட்டேன். பக்கத்தில் ப்ராதமிக் தேர்வு எழுதும் ஒரு சிறுவன் ( அப்படா நாம எழுதுறத பாத்தாலும் இவனுக்கு புரியாதுநு ஒரு சந்தோசம்) இருந்தான். விடைத்தாள், வினாத்தாள் எல்லாம் வழங்கப்பட்டது. வினாத்தாள் பார்த்ததும் ஒரு சந்தேகம் இது நமக்கானதுதானா? ( அப்புறம் என்னங்க நா படிச்சது எதுமே வரல). தேர்வின் பெயர் எல்லாம் சரியாக இருந்ததால் இது பிரவீன் வினாத்தாள் தான் என நம்பி எழுத ஆரம்பித்தேன் (வேற வழி). சரியாக ஒரு மணிநேரம் எழுதினேன் ( மொத்தம் 3 மணிநேரம் ). பக்கத்தில் இருந்த சிறுவன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் (ஆஹா! கண்டுபிடிச்சிட்டானோ!!!). சரியாக கவனித்த பிறகு தெரிந்தது அவனுக்கும் எதுவும் தெரியவில்லை (அப்படா!!!). சரி, அவனுக்காவது உதவி செய்யலாம் என நினைத்து அனைத்து விடைகளையும் சொல்லிக்கொடுத்தேன் ( சரியாதாங்க..... நம்புங்க).
3 மணிநேரம் முடிந்தது " அக்கா, நன்றி" என தம்பி விடைபெற்றான். வெளியில் வந்து அடுத்த நேர்முக தேர்வுக்காக தயாராக நினைத்தேன் (அதாச்சும் ஒழுங்கா பண்ண வேண்டும் என்ற நல்ல எண்ணம். நேர்முக தேர்வு அறையின் முன் பலர் காத்திருந்தார்கள். அவர்களிடம் நானே அறிமுகமாகி காலையில் நடந்த தேர்வு பற்றி விசாரித்தேன். அனைவரும் வினாத்தாள் மிக கடினம் என கூறினார்கள் ( ஒரு சந்தோசம்). அத்தோடு நான் நிறுத்தியிருக்கலாம், வினாத்தாளை எடுத்து அவர்களிடம் "question எல்லாம் out of syllabus பாத்திங்களா?" என்றேன், அதன்பிறகு தான் தெரிந்தது syllabus மாறிவிட்டதாம் ( அவமானம்....). இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் எப்படியோ சமாளித்தேன். அதன் பிறகு தனியாக அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன் ( வேற என்னங்க பண்ண புக் தான் மாறிபோச்சே படிக்கவா முடியும் புரட்ட தான் செய்யணும்..... ).
ஒரு வழியாக எனக்கான முறை வந்தது. தேர்வாளர் ஒல்லியாக சிடுசிடுவென இருந்தார். அவரைபற்றி விசாரித்தபோதே என் தேர்வு முடிவு என்னவாக இருக்கும் என புரிந்தாலும் என் பெயரை அழைத்ததும் உள்ளே சென்றேன் ( சிக்கிடோம் தப்பிக்கவா முடியும்?!!!?....).
தேர்வாளர் சரியாக 30 நிமிடம் என்னிடம் கேள்விகேட்டார் ( அப்போ நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாருங்க .....). 10 கேள்விகள் கேட்டிருப்பார், அதில் உன் பாடப்புத்தகத்தில் எத்தனை பாடங்கள் உள்ளன என்பதும் காலையில் எழுதிய தேர்வில் வெற்றி பெற்று விடுவாயா என்ற கேள்வியும் அடக்கம், அவரின் அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரே பதிலை நான் கூறினேன். என்ன தெரியுமா? " மாப் கீஜியே முஜே நஹி மாலும் ". "சாரி சார், எனக்கு தெரியாது" என்பதுதான் அதன் அர்த்தம் (நாங்க எப்பவும் உண்மைய தான் சொல்வோம் ... ஆமா!!).
ஒருவழியாக என்னை வெளியில் போக அனுமதித்தார் (நான் வெளிய வந்த பிறகு 10 நிமிடத்திற்கு யாரும் உள்ளே அனுமதிக்கப்படலங்க்றது வேற விஷயம்). இப்போ உங்க எல்லார் மனதிலும் உள்ள ஒரு கேள்வி நான் வெற்றி பெற்றேனா என்பது தானே? சரியாக 2 மாதத்திற்கு பிறகு எனக்கு இதே கேள்விக்கு விடை கிடைத்தது. ஆம் நான் வெற்றி பெற்றேன் ( அந்த தம்பி பாஸ் பண்ணான்னு தான் தெரியல.....). இரண்டாம் நிலையில் தேர்வு அடைந்தேன். நேர்முகதேர்வில் நான் பெற்றது 54 மதிப்பெண்கள் ( பாஸ் மார்க் 50 ).
நான் தேர்வு எழுதிய அந்த நாள் என்னால் மறக்க முடியாததாகி விட்டது ( அந்த தேர்வாளர பாத்தா கால்ல விழனும்....).
பி.கு
கடந்த பதிவைபார்த்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....
இது நிகழ்ந்தது 2006இல் , அப்பொழுது நான் ஹிந்தி பிரவின் பரிட்சை எழுத முடிவுசெய்தேன் ( எனது அம்மா "உன்னவிட சின்ன பிள்ளைங்க எல்லாம் ஹிந்தி பரிட்சை முடிச்சிட்டாங்க நீ மட்டும் எதையும் ஒழுங்கா செய்யாத" என திட்டியதன் விளைவு இந்த அவசர முடிவு). அதனால் புத்தகத்தை தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்கி படிக்க ஆரம்பித்தேன் ( அம்மா நம்பனும்ல). படிப்பது எப்படி? நல்ல பிள்ளையா தினமும் அத்தை வீட்டிற்கு சென்று படிப்பது என முடிவானது. அதன்படி தினமும் அத்தை வீட்டிற்கு சென்றேன் (போற வழில தான் என் நண்பர் வீடு உள்ளது இப்ப புரிஞ்சிருக்குமே நான் ஏன் அத்தை வீட்டுக்கு போக முடிவெடுதேனு).
இப்படியே இரண்டு மாதங்கள் சென்றதில் பரிட்சை தேதி வந்தது. இது போன்ற அரசாங்க தேர்வுகள் எல்லாம் எஸ்.எல்.பி பள்ளியில் நடைபெறுவது வழக்கம். பிரவீன் தேர்வில் மொத்தமாக 3 எழுத்து தேர்வு மற்றும் 1 நேர்முக தேர்வு 2 நாட்களாக நடைபெறும். முதல்நாள் 2 தேர்வும் எப்படியோ எழுதி முடித்துவிட்டேன். 3 வது தேர்வு இலக்கணம் (தமிழ் இலக்கணமே நமக்கு அரகொற இதுல ஹிந்தி இலக்கணமா? )
எஸ்.எல்.பி பள்ளி |
3 மணிநேரம் முடிந்தது " அக்கா, நன்றி" என தம்பி விடைபெற்றான். வெளியில் வந்து அடுத்த நேர்முக தேர்வுக்காக தயாராக நினைத்தேன் (அதாச்சும் ஒழுங்கா பண்ண வேண்டும் என்ற நல்ல எண்ணம். நேர்முக தேர்வு அறையின் முன் பலர் காத்திருந்தார்கள். அவர்களிடம் நானே அறிமுகமாகி காலையில் நடந்த தேர்வு பற்றி விசாரித்தேன். அனைவரும் வினாத்தாள் மிக கடினம் என கூறினார்கள் ( ஒரு சந்தோசம்). அத்தோடு நான் நிறுத்தியிருக்கலாம், வினாத்தாளை எடுத்து அவர்களிடம் "question எல்லாம் out of syllabus பாத்திங்களா?" என்றேன், அதன்பிறகு தான் தெரிந்தது syllabus மாறிவிட்டதாம் ( அவமானம்....). இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் எப்படியோ சமாளித்தேன். அதன் பிறகு தனியாக அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன் ( வேற என்னங்க பண்ண புக் தான் மாறிபோச்சே படிக்கவா முடியும் புரட்ட தான் செய்யணும்..... ).
ஒரு வழியாக எனக்கான முறை வந்தது. தேர்வாளர் ஒல்லியாக சிடுசிடுவென இருந்தார். அவரைபற்றி விசாரித்தபோதே என் தேர்வு முடிவு என்னவாக இருக்கும் என புரிந்தாலும் என் பெயரை அழைத்ததும் உள்ளே சென்றேன் ( சிக்கிடோம் தப்பிக்கவா முடியும்?!!!?....).
தேர்வாளர் சரியாக 30 நிமிடம் என்னிடம் கேள்விகேட்டார் ( அப்போ நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாருங்க .....). 10 கேள்விகள் கேட்டிருப்பார், அதில் உன் பாடப்புத்தகத்தில் எத்தனை பாடங்கள் உள்ளன என்பதும் காலையில் எழுதிய தேர்வில் வெற்றி பெற்று விடுவாயா என்ற கேள்வியும் அடக்கம், அவரின் அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரே பதிலை நான் கூறினேன். என்ன தெரியுமா? " மாப் கீஜியே முஜே நஹி மாலும் ". "சாரி சார், எனக்கு தெரியாது" என்பதுதான் அதன் அர்த்தம் (நாங்க எப்பவும் உண்மைய தான் சொல்வோம் ... ஆமா!!).
ஒருவழியாக என்னை வெளியில் போக அனுமதித்தார் (நான் வெளிய வந்த பிறகு 10 நிமிடத்திற்கு யாரும் உள்ளே அனுமதிக்கப்படலங்க்றது வேற விஷயம்). இப்போ உங்க எல்லார் மனதிலும் உள்ள ஒரு கேள்வி நான் வெற்றி பெற்றேனா என்பது தானே? சரியாக 2 மாதத்திற்கு பிறகு எனக்கு இதே கேள்விக்கு விடை கிடைத்தது. ஆம் நான் வெற்றி பெற்றேன் ( அந்த தம்பி பாஸ் பண்ணான்னு தான் தெரியல.....). இரண்டாம் நிலையில் தேர்வு அடைந்தேன். நேர்முகதேர்வில் நான் பெற்றது 54 மதிப்பெண்கள் ( பாஸ் மார்க் 50 ).
நான் தேர்வு எழுதிய அந்த நாள் என்னால் மறக்க முடியாததாகி விட்டது ( அந்த தேர்வாளர பாத்தா கால்ல விழனும்....).
பி.கு
கடந்த பதிவைபார்த்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....
Happy to know that u r a good writer. Keep it up.. apa apa post panunga :):):)
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.. தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்,,, புலமை மிக்க poet aha வர வாழ்த்துக்கள்
ReplyDelete